பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.
.நூற்றாண்டினை தொட்ட ஹீராபென் அம்மையார் நமக்கு அளித்த மகத்தான பரிசுதான் நம் பிரதமர் மோடி அவர்கள். பிரதமருக்கும் – அவரது தாயாருக்குமான உணர்வுபூர்வமான பந்தமும் – பாசமும் இந்த உலகம் அறிந்தது. ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அம்மனிதன் முதலில் கொடுக்கும் முக்கியத்துவமும் – மரியாதையும் அவரை ஈன்ற தாய்க்குதான் என்பதை அனைவருக்கும் உணர்த்தியர் திரு. மோடி அவர்கள். அவரது தாயாரின் மறைவு பிரதமருக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
இத்துயரமான சமயத்தில், தன் தாயாரை இழந்து வாடும் பாரதப்பிரதமர் அவர்களுக்கும் - அவரது குடும்பத்தாருக்கும், என்னுடைய இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அம்மையாரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
வருத்தங்களுடன்,
டாக்டர் ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies